செய்தி : தசதரன்
செப்.     11.09.2015
கூலிம் 

டப்ளின் தோட்ட மண்ணின் மைந்தர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி 

எதிர்வரும் 16.09.2015ஆம் நாள் புதன்கிழமை காலை மணி 1100க்கு மேல் டப்ளின் தோட்ட மண்ணின் மைந்தர்கள் ஒன்று கூடல் நிகழ்வு தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானதிற்கு  அருகில் உள்ள பொது  மண்டபத்தில் நடைப்பெறவுள்ளதாக  ஏற்பாட்டுக்குழு செயலாளர் டாக்டர் எம்.முரளி தெரிவித்தார்.

இந்த நிகழ்வினை டப்ளின் தோட்ட மண்ணின் மைந்தர்கள் குழுவின் தலைவரும்,கூலிம் பண்டார் பாரு அரசாங்க சார்பற்ற ஒருங்கிணைப்பு தலைவர் மக்கள் முரசு கோவி.தியாகராஜன் அவர்களின் தலைமையில் ஆறாம் ஆண்டாக நடைபெறவுள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஒன்று கூடல் நிகழ்வு வெளியூர்களில் இருக்கும் டப்ளின் தோட்ட மண்ணின் மைந்தர்கள் மத்தியில் ஒரு சிறந்த உறவு  பாலமாக அமையும் என்று டாக்டர் எம்.முரளி தெரிவித்தார்.இந்த நிகழ்வில் சிறப்பு அங்கமாக நட்பு முறையிலான காற்பந்து போட்டி தோட்ட மண்ணின் மைந்தர்களுக்கும் கூலிம் மாவட்ட காவல் துறையினருக்கும் மத்தியில் நடைபெறுவதுடன்,கோல்ப் போட்டியும் உடன் ஏற்பாடு செய்பட்டுள்ளதாக டாக்டர் முரளி மேலும் சொன்னார்.

ஆகவே நாடு தழுவிய நிலையில் உள்ள டப்ளின் தோட்ட மண்ணின் மைந்தர்கள் இந்த நிகழ்வில் திரளாக வந்து கலந்து கொள்ள அழைக்கப்டுவதாக ஏற்பட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

மேல் விபரங்களுக்கு தலைவர் கோவி.தியாகராஜன் 013-5150167
துணை தலைவர் எம்.மாரிமுத்து 019-5728118 ,டாக்டர் எம்.முரளி 
019-4771945 , ஆகியோருடன் தொடர்புக்கொள்ளலாம் 




  

Comments

Popular posts from this blog